சோதரனே!
சோபனங்கள்
சோகம் வந்து -உனை
சூழ்ந்து கொண்டாலும்
சோர்ந்து விடாமல்
சுகமாய் எண்ணி
சுமந்து செல்
வேகமாய் சென்று
வெற்றியை கண்டுகொள்...!!!
கல்விப் பசி
வந்ததுனால்
வயிற்றுப் பசி
பார்க்காமல்
போராடியதால்
பேரெடுத்து
பெருமகனாய் ஆனாய்...!!!
ஊரெடுத்து
உன் பெயரை
உச்சரிக்குமளவுக்கு
உயர்ந்து நீ போனாய்...!!!
வாளெடுத்து
வந்தவர்களும் - உன்
வசீகரம் கண்டு
வலுவிழந்து போனார்கள்...!!!
ஊழலற்ற
உன் பயணம்
ஊருக்குப் புரிய
நாளெடுக்கலாம்...!!!
கள்ளமில்லா
உன் மனசை
கண்டு கொள்ள
சுய நலங்கள்
தடுக்கலாம்
இதற்காக
வருத்தப் பட தேவையில்லை...!!!
தம்பி
நிஜங்களை நோக்கி
பயணித்துப் பார்
நேசிக்கப் படுவாய்...!!!
கனிவான
உன் பார்வையை வீசு
காலமெல்லாம்
கவரப் படுவாய்...!!!
இதமாகப் பேசு
இதயங்களில்
ஊடுருவி
இடம் பிடிப்பாய்...
எரிமலைகள்
குமுறினாலும்
எதிர் கொள்ள
தயாராயிரு
முடிசூடப் படுவாய்...!!!
ஏழைகளை
நேசிக்க தொடங்கு
என்றும்
போற்றப் படுவாய்...!!!
தடம் புரண்டு
தடுமாறிப் போன
போராளிகள்
புறப்பட்டு வருகிறார்கள்
புன்னகைப் பூக்களால்
அவர்களுக்கு
மாலையிடு...!!!
விரைவில்..
உன் பெயரெங்கும்
எதிரொலிக்கும்
ஊரெங்கும்
உன் நாமம் மணக்கும்...!!!
"இன்ஷா அல்லாஹ்"
- மீராவோடை சுபைர் -
0 comments: